×

சுற்றுலா வந்த இடத்தில் பரிதாபம் ஏற்காடு அருவியில் தவறி விழுந்து தந்தை, மகள் பலி: சென்னையைச் சேர்ந்தவர்கள்

ஏற்காடு: சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் பாலமுரளி(43), ஐடி கம்பெனி ஊழியர். இவரது மனைவி சுந்தரலட்சுமி(41). இவர்களது மகள்கள் சவுமியா(13), சாய்சுவேதா(3). சவுமியா 8ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையையொட்டி குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை, பாலமுரளி ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தார். விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், நேற்று மதியம் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் அருவிக்கு சென்று குளித்த போது, சவுமியா பாறை மீது ஏறியுள்ளார். அவர் விழுந்து விடக் கூடாது என்பதற்காக, பாலமுரளியும் ஏற முயன்றார். அப்போது, கால் தவறி இருவரும் கீழே விழுந்து இருவரும் பலியாகினர்.

The post சுற்றுலா வந்த இடத்தில் பரிதாபம் ஏற்காடு அருவியில் தவறி விழுந்து தந்தை, மகள் பலி: சென்னையைச் சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Balamurali ,Chennai Manthaalam ,sunderalakshmi ,Saumia ,Chaysuveda ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...